Latest topics
Similar topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
3 posters
Page 1 of 1
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
நன்றி
அருமை
தொடரட்டும்
அன்புடன் தமிழ் அரங்கம்
அருமை
தொடரட்டும்
அன்புடன் தமிழ் அரங்கம்
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
அருமையான உம் படைப்புக்கு எம் வாழ்த்துக்கள் என் இனிய புத்தாண்டடு நல் வாழ்தத்துக்கள்
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
கனிவான உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி
தொடருங்கள்
உங்கள் படைப்புகள் மூலம்
அருமை தமிழ் நேசன் அவர்களே
அன்புடன் தமிழ் அரங்கம்
தொடருங்கள்
உங்கள் படைப்புகள் மூலம்
அருமை தமிழ் நேசன் அவர்களே
அன்புடன் தமிழ் அரங்கம்
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
தங்களின் மனந்திறந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி! தாயைப் போற்றுவோம்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- வழி நடத்துனர்
- Posts : 132
Join date : 16/11/2010
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
அன்பு தம்பி தாயால் நீ உயர்ந்தாய்
தரணியிலே நீ புகழ் பெற்றாய்
வெற்றி சிகரம் உனக்காக . . நீ
வெல்லப்போவது நிஜம்
அருமையான வரிகள் தொடரட்டும்
தமிழ் அரங்கம்
தரணியிலே நீ புகழ் பெற்றாய்
வெற்றி சிகரம் உனக்காக . . நீ
வெல்லப்போவது நிஜம்
அருமையான வரிகள் தொடரட்டும்
தமிழ் அரங்கம்
என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
என் தாய்!
எந்தையிடம் தாவென்று
எனைக் கேட்டு பெற்றவள்;
யாரவள்?
என் தாய்!
என் தாயே!
கருவான நாள் முதலாய்
கவனித்தாய்;
எனை
கண்ணும் கருத்தாய்!
கருவிலே நான் வளர
உன்னுணவை எனக்கும்
தாமாகவே
பகிர்ந்தளித்தாய்!
ஈரைந்து திங்களாய்
இடுப்பு நோவுடன் எனை சுமந்து
மீளாத வலி தாங்கி
மீண்டு வந்து ஈன்றெடுத்தாய்!
கண் விழித்ததும் கண்டு
எனைக் கனிவுடனே கண்ணோக்கி
வாஞ்சையோடு
வாரியணைத்தாய்!
அனுதினமும் அன்போடு
எனை
உன் நெஞ்சணைத்து
அமுதளித்தாய்!
பஞ்சணையி லல்ல; உன்
நெஞ்சணையில் தூங்க வைத்தாய்!
உறவுகளை அறிவித்து எனக்கு
உலகையும் கற்பித்தாய்!
என் மழலை மொழி கேட்டு
உன் துன்பம் தொலைத்திருந்தாய்!
எழுந்து நான் நிற்கையிலே
என் மகனென்று மகிழ்ந்திருந்தாய்!
நோயோ எனை வருத்த
கண் விழித்து பசித்திருந்தாய்!
படைத்தவனை கடிந்து நீயும்
பத்திய உணவு புசித்திருந்தாய்!
என் பசியை நான் மறக்க
உன் பசியை நீ மறந்தாய்!
பாலகனாம் எனை நினைத்து
பகல் கனவு கண்டிருந்தாய்!
அதிகாலை துயிலெழுப்பி
அடுத்த நாளை அறிவித்தாய்!
சிறு வெற்றியை மிகப்பெரிதாய்
சிறப்பு செய்து நீ மகிழ்ந்தாய்!
வேலைக்கு எனை அனுப்ப
வேண்டாமென்று
நீ மறுத்தாய்.
நீ மறத்தாய்!
கை வளையல் தான் வைத்து
கல்லூரிக் கனுப்பி வைத்தாய்!
பொன்னகையை தான் மறந்து
புன்னகையை நீ அணிந்தாய்!
உன்
உதிரத்தை உயிராக்கி
எனக்கூட்டியதால்
உருக்குலைந்தாய்!
நீயோ கனிவின் ஊற்று.
உன் அன்பிற் குண்டோ மாற்று!
நீ பொறுமையின் பிறப்பிடம்.
சகிப்புத் தன்மையின் புகலிடம்!
உன் சேலைச் சோலை
காணக்கிடையா பூங்காவனம்.
சுமை தாங்கியாம் என் தாயே
நீ காணக் கிடைத்த என் தெய்வம்!
உன் உடல் காண் சுருக்கங்கள்
சுருக்கமல்ல தாயே!
நீ எனக்களித்த
ஆயுள் ரேகை!
என்ன தவம் செய்தேன்
என் தாயே!
என் தாயாய்
உனை அடைய!
இனியொரு சொர்க்கம்
தேவையில்லை;
உன் அருகாமை என்றும்
எனக்கிருக்கையிலே!
முழுமை பெற்று விட்டேன்
தாயே!
முழு மதியாய்
உன்னை பெற்றதால்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
எந்தையிடம் தாவென்று
எனைக் கேட்டு பெற்றவள்;
யாரவள்?
என் தாய்!
என் தாயே!
கருவான நாள் முதலாய்
கவனித்தாய்;
எனை
கண்ணும் கருத்தாய்!
கருவிலே நான் வளர
உன்னுணவை எனக்கும்
தாமாகவே
பகிர்ந்தளித்தாய்!
ஈரைந்து திங்களாய்
இடுப்பு நோவுடன் எனை சுமந்து
மீளாத வலி தாங்கி
மீண்டு வந்து ஈன்றெடுத்தாய்!
கண் விழித்ததும் கண்டு
எனைக் கனிவுடனே கண்ணோக்கி
வாஞ்சையோடு
வாரியணைத்தாய்!
அனுதினமும் அன்போடு
எனை
உன் நெஞ்சணைத்து
அமுதளித்தாய்!
பஞ்சணையி லல்ல; உன்
நெஞ்சணையில் தூங்க வைத்தாய்!
உறவுகளை அறிவித்து எனக்கு
உலகையும் கற்பித்தாய்!
என் மழலை மொழி கேட்டு
உன் துன்பம் தொலைத்திருந்தாய்!
எழுந்து நான் நிற்கையிலே
என் மகனென்று மகிழ்ந்திருந்தாய்!
நோயோ எனை வருத்த
கண் விழித்து பசித்திருந்தாய்!
படைத்தவனை கடிந்து நீயும்
பத்திய உணவு புசித்திருந்தாய்!
என் பசியை நான் மறக்க
உன் பசியை நீ மறந்தாய்!
பாலகனாம் எனை நினைத்து
பகல் கனவு கண்டிருந்தாய்!
அதிகாலை துயிலெழுப்பி
அடுத்த நாளை அறிவித்தாய்!
சிறு வெற்றியை மிகப்பெரிதாய்
சிறப்பு செய்து நீ மகிழ்ந்தாய்!
வேலைக்கு எனை அனுப்ப
வேண்டாமென்று
நீ மறுத்தாய்.
நீ மறத்தாய்!
கை வளையல் தான் வைத்து
கல்லூரிக் கனுப்பி வைத்தாய்!
பொன்னகையை தான் மறந்து
புன்னகையை நீ அணிந்தாய்!
உன்
உதிரத்தை உயிராக்கி
எனக்கூட்டியதால்
உருக்குலைந்தாய்!
நீயோ கனிவின் ஊற்று.
உன் அன்பிற் குண்டோ மாற்று!
நீ பொறுமையின் பிறப்பிடம்.
சகிப்புத் தன்மையின் புகலிடம்!
உன் சேலைச் சோலை
காணக்கிடையா பூங்காவனம்.
சுமை தாங்கியாம் என் தாயே
நீ காணக் கிடைத்த என் தெய்வம்!
உன் உடல் காண் சுருக்கங்கள்
சுருக்கமல்ல தாயே!
நீ எனக்களித்த
ஆயுள் ரேகை!
என்ன தவம் செய்தேன்
என் தாயே!
என் தாயாய்
உனை அடைய!
இனியொரு சொர்க்கம்
தேவையில்லை;
உன் அருகாமை என்றும்
எனக்கிருக்கையிலே!
முழுமை பெற்று விட்டேன்
தாயே!
முழு மதியாய்
உன்னை பெற்றதால்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
bparthasarathi- வழி நடத்துனர்
- Posts : 132
Join date : 16/11/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்
» மீண்டும் வருகிறேன்
31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்
» * * * அம்மா * * *
21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்
» மதியும் விதியும் (கவிதை)
22nd December 2015, 8:06 am by kirikasan
» யாதுமாகிய நீயே தாயே !
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» பாசத்தாலே . . .
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» விரைவில் . . .
21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்
» தீபாவளி
3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்
» இது தீபாவளிக்காக . . .
3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்
» நல்வாழ்த்துக்கள்
23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்
» நடிகை . . .
26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்
» தப்பித்து வந்தவனின் மரணம்.
14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்
» தமிழே . . .
28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்
» தேசப் பிதா
23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்
» வணக்கம் . . . நன்றி . . .
15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்
» காத்திருப்பேன் . . .
9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்