Latest topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
அறுவை சிகிச்சைக்குப்பின் சோனியா ஓகே : தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பு
Page 1 of 1
அறுவை சிகிச்சைக்குப்பின் சோனியா ஓகே : தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பு
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, அறுவை
சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது, சோனியா நலமுடன்
இருப்பதாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், காங்கிரஸ்
கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, கடந்த சில
நாட்களாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மிகவும் பரபரப்பாக
எதிர்பார்க்கப்பட்ட, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர்
பங்கேற்கவில்லை. இது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, புரியாத
புதிராக இருந்தது. சோனியா எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில்,
நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி
செய்தியாளர்களிடம் கூறுகையில்,"உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சோனியா,
வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவர்
அங்கேயே தங்கியிருப்பார். இந்த இடைப்பட்ட காலத்தில், கட்சிப் பணிகளை
கவனிப்பதற்காக, அந்தோணி, ராகுல் மற்றும் நான் (ஜனார்த்தன் திவேதி)
நியமிக்கப்பட்டுள்ளோம்' என்றார்.
இந்த அறிவிப்பு, டில்லி அரசியல்
வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், சோனியாவுக்கு என்ன
பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர் எந்த நாட்டில்
தாங்கியுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை.
இதைத்
தொடர்ந்து, நேற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை
வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: காங்., தலைவர் சோனியா,
சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று
முன்தினம் (4ம் தேதி) அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக
இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்களால்
கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் ராகுல், பிரியங்கா மற்றும் ராபர்ட்
வதேரா ஆகியோர் தங்கியிருந்து, கண்காணித்து வருகின்றனர். இது, சோனியாவின்
சொந்த விஷயம் என்பதால், இதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என,
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
சோனியாவுக்கு என்ன சிகிச்சை? :
இதற்கிடையே, சோனியா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது, வெளிப்படையாக
தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு எதற்காக அறுவை
சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விஷயத்தில், தொடர்ந்து சஸ்பென்ஸ்
நீடிக்கிறது. கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள, ராகுல் உள்ளிட்ட
பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும், சஸ்பென்சை அதிகரிக்க வைத்துள்ளது.
சோனியா, முழுமையாக குணமடைவதற்கு நாள் ஆகும் என்பதால் தான், பொறுப்பாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனரா என, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு
கிளம்பியுள்ளது. இந்நிலையில், கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக, ராகுல்
விரைவில், வெளிநாட்டில் இருந்து திரும்புவார் என்றும், காங்கிரஸ்
வட்டாரங்கள் கூறுகின்றன.
நன்றி
தின மலர்
சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது, சோனியா நலமுடன்
இருப்பதாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், காங்கிரஸ்
கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, கடந்த சில
நாட்களாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மிகவும் பரபரப்பாக
எதிர்பார்க்கப்பட்ட, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர்
பங்கேற்கவில்லை. இது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, புரியாத
புதிராக இருந்தது. சோனியா எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில்,
நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி
செய்தியாளர்களிடம் கூறுகையில்,"உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சோனியா,
வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவர்
அங்கேயே தங்கியிருப்பார். இந்த இடைப்பட்ட காலத்தில், கட்சிப் பணிகளை
கவனிப்பதற்காக, அந்தோணி, ராகுல் மற்றும் நான் (ஜனார்த்தன் திவேதி)
நியமிக்கப்பட்டுள்ளோம்' என்றார்.
இந்த அறிவிப்பு, டில்லி அரசியல்
வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், சோனியாவுக்கு என்ன
பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர் எந்த நாட்டில்
தாங்கியுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை.
இதைத்
தொடர்ந்து, நேற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை
வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: காங்., தலைவர் சோனியா,
சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று
முன்தினம் (4ம் தேதி) அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக
இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்களால்
கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் ராகுல், பிரியங்கா மற்றும் ராபர்ட்
வதேரா ஆகியோர் தங்கியிருந்து, கண்காணித்து வருகின்றனர். இது, சோனியாவின்
சொந்த விஷயம் என்பதால், இதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என,
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
சோனியாவுக்கு என்ன சிகிச்சை? :
இதற்கிடையே, சோனியா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது, வெளிப்படையாக
தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு எதற்காக அறுவை
சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விஷயத்தில், தொடர்ந்து சஸ்பென்ஸ்
நீடிக்கிறது. கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள, ராகுல் உள்ளிட்ட
பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும், சஸ்பென்சை அதிகரிக்க வைத்துள்ளது.
சோனியா, முழுமையாக குணமடைவதற்கு நாள் ஆகும் என்பதால் தான், பொறுப்பாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனரா என, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு
கிளம்பியுள்ளது. இந்நிலையில், கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக, ராகுல்
விரைவில், வெளிநாட்டில் இருந்து திரும்புவார் என்றும், காங்கிரஸ்
வட்டாரங்கள் கூறுகின்றன.
நன்றி
தின மலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்
» மீண்டும் வருகிறேன்
31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்
» * * * அம்மா * * *
21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்
» மதியும் விதியும் (கவிதை)
22nd December 2015, 8:06 am by kirikasan
» யாதுமாகிய நீயே தாயே !
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» பாசத்தாலே . . .
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» விரைவில் . . .
21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்
» தீபாவளி
3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்
» இது தீபாவளிக்காக . . .
3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்
» நல்வாழ்த்துக்கள்
23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்
» நடிகை . . .
26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்
» தப்பித்து வந்தவனின் மரணம்.
14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்
» தமிழே . . .
28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்
» தேசப் பிதா
23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்
» வணக்கம் . . . நன்றி . . .
15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்
» காத்திருப்பேன் . . .
9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்