Latest topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
நடுரோட்டில் பறந்த 1,000 ரூபாய் நோட்டுகள்
Page 1 of 1
நடுரோட்டில் பறந்த 1,000 ரூபாய் நோட்டுகள்
போக்குவரத்து நிறைந்த நடுரோட்டில் திடீரென பறந்த 1,000 ரூபாய் நோட்டுகளை
பொதுமக்கள் போட்டி போட்டு எடுக்க குவிந்ததால் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த ஆவடி காமராஜர் சிலை அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் வாகனங்கள் வேகமாக சென்று
கொண்டிருந்தன.
அப்போது, திடீரென ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து 1,000 ரூபாய் நோட்டுகள்
காற்றில் பறந்து வந்து சாலையில் விழுந்தன. இதைப்பார்த்ததும் அந்த வழியாக
சென்ற பொதுமக்களும், சாலையின் இருபக்கம் நின்று கொண்டிருந்தவர்களும் ஓடி
வந்து ரூபாய் நோட்டுகளை எடுக்க ஆரம்பித்தனர். வாகனங்களில் சென்று
கொண்டிருந்தவர்களும் சாலையின் ஓரமாக தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு,
ஓடி வந்து ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.
மக்கள் போட்டி, போட்டுக்கொண்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க குவிந்ததால், சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நடுரோட்டில் நின்றன.
திடீரென வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து
பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்தப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும்
ஏற்பட்டது. அப்போது அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி
கொண்டிருந்த ஏட்டு கல்யாணி, திடீரென போக்குவரத்து ஸ்தம்பித்ததை பார்த்து,
ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ என்று அங்கு விரைந்து வந்தார்.
ஆனால், பொதுமக்கள் போட்டி, போட்டுக் கொண்டு நடுரோட்டில் ரூபாய்
நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து வியப்படைந்தார். அவர், ரூபாய்
நோட்டுகளை எடுத்துக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல்
செய்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.33 ஆயிரம் ஆகும். அவர், அந்த பணத்தை
போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியகருப்பனிடம் ஒப்படைத்தார்.
பெரியகருப்பன் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு,
ரூ.33 ஆயிரத்தையும் சட்டம், ஒழுங்கு பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம்
ஒப்படைத்தார்.
நடுரோட்டில் பறந்த இந்த பணம் யாருடையது? வாகனத்தில் சென்ற யாரேனும்
இந்த பணத்தை தவற விட்டனரா? அல்லது கொள்ளையடித்தவர்கள் பணத்தை பங்கு
போட்டபோது தகராறு ஏற்பட்டு, அவர்கள் கையில் இருந்து வெளியே வீசப்பட்டதா?
என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் போட்டி போட்டு எடுக்க குவிந்ததால் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த ஆவடி காமராஜர் சிலை அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் வாகனங்கள் வேகமாக சென்று
கொண்டிருந்தன.
அப்போது, திடீரென ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து 1,000 ரூபாய் நோட்டுகள்
காற்றில் பறந்து வந்து சாலையில் விழுந்தன. இதைப்பார்த்ததும் அந்த வழியாக
சென்ற பொதுமக்களும், சாலையின் இருபக்கம் நின்று கொண்டிருந்தவர்களும் ஓடி
வந்து ரூபாய் நோட்டுகளை எடுக்க ஆரம்பித்தனர். வாகனங்களில் சென்று
கொண்டிருந்தவர்களும் சாலையின் ஓரமாக தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு,
ஓடி வந்து ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.
மக்கள் போட்டி, போட்டுக்கொண்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க குவிந்ததால், சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நடுரோட்டில் நின்றன.
திடீரென வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து
பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்தப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும்
ஏற்பட்டது. அப்போது அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி
கொண்டிருந்த ஏட்டு கல்யாணி, திடீரென போக்குவரத்து ஸ்தம்பித்ததை பார்த்து,
ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ என்று அங்கு விரைந்து வந்தார்.
ஆனால், பொதுமக்கள் போட்டி, போட்டுக் கொண்டு நடுரோட்டில் ரூபாய்
நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து வியப்படைந்தார். அவர், ரூபாய்
நோட்டுகளை எடுத்துக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல்
செய்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.33 ஆயிரம் ஆகும். அவர், அந்த பணத்தை
போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியகருப்பனிடம் ஒப்படைத்தார்.
பெரியகருப்பன் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு,
ரூ.33 ஆயிரத்தையும் சட்டம், ஒழுங்கு பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம்
ஒப்படைத்தார்.
நடுரோட்டில் பறந்த இந்த பணம் யாருடையது? வாகனத்தில் சென்ற யாரேனும்
இந்த பணத்தை தவற விட்டனரா? அல்லது கொள்ளையடித்தவர்கள் பணத்தை பங்கு
போட்டபோது தகராறு ஏற்பட்டு, அவர்கள் கையில் இருந்து வெளியே வீசப்பட்டதா?
என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்
» மீண்டும் வருகிறேன்
31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்
» * * * அம்மா * * *
21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்
» மதியும் விதியும் (கவிதை)
22nd December 2015, 8:06 am by kirikasan
» யாதுமாகிய நீயே தாயே !
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» பாசத்தாலே . . .
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» விரைவில் . . .
21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்
» தீபாவளி
3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்
» இது தீபாவளிக்காக . . .
3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்
» நல்வாழ்த்துக்கள்
23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்
» நடிகை . . .
26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்
» தப்பித்து வந்தவனின் மரணம்.
14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்
» தமிழே . . .
28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்
» தேசப் பிதா
23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்
» வணக்கம் . . . நன்றி . . .
15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்
» காத்திருப்பேன் . . .
9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்