தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
தப்பித்து வந்தவனின் மரணம்.   I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

தப்பித்து வந்தவனின் மரணம்.

2 posters

Go down

தப்பித்து வந்தவனின் மரணம்.   Empty Re: தப்பித்து வந்தவனின் மரணம்.

Post by தமிழ் அரங்கம் 14th August 2012, 1:05 pm

அன்பும் அரவணைப்பும்

ஆசையோடு ஆடிப்பாடி


இயல்பு வாழ்வை இயற்கையாய்


இவன் வாழ் நினைத்தான் போலும்


வாழட்டும் தமிழ்


வாழ வைப்போம் தமிழை . . .



அன்புடன்


கந்தவேல் கவிதைக்காக . . .


தமிழ் அரங்கம்

தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

தப்பித்து வந்தவனின் மரணம்.   Empty தப்பித்து வந்தவனின் மரணம்.

Post by ரோஷான் ஏ.ஜிப்ரி 9th August 2012, 8:51 pm

நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன்.
முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும்.
தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய்.
எங்கேயோ பார்த்த பரிச்சயத்தில்தான் பேசத்தொடங்கினான்.
வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை
மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் .
சட்டி ,பானை ,உலாமூடி,பீங்கான் ,அகப்பையென குடும்பமாய்
வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான்.

காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு
அவனது உலகமே அழிந்ததாய் கதறினான் .
நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும்,
குரூரமான எல்லா விஷஜந்துக்களையும் பார்த்ததாகவும்,
பயத்தின் நடுக்கம் மேலிட தழுதழுத்த குரலில் சொன்னான்.

வாழ்வு பற்றிய பசி, தாகம்
அவனது கண்களிலிருந்து உதிர்ந்து விழுந்தது நெருப்பின் சாயலில்.
வயிற்றை இறுக தடவிய படி ஐயா என்றவாறு சரிந்தான்
மீண்டெழ முடியாதபடி சாவின் மடியில்.
இறுக மூடிய விரல்களை பிரித்தபோது .....,
உள்ளங்கையில் ஒரு பிடி மண்ணிருந்தது .
அவனது ஊரினுடயதாய் இருந்திருக்க வேண்டுமது.
மரண வாக்குமூலமாய் என்னிடம் கூறியதை பார்த்தால்
இவன் பொய் சொல்லியிருக்க மாட்டான்.
என்பதை எண்ணியெண்ணி,பேய் பிடித்தது போல்
அதற்கு பின்வந்தநாட்கள் தூங்கவே இல்லை நான்.

ரோஷான் ஏ.ஜிப்ரி -இலங்கை.

ரோஷான் ஏ.ஜிப்ரி

Posts : 4
Join date : 04/08/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum